Monday, February 23, 2009

528. ஈழததமிழர் ஆதரவாக சென்னையில் நடந்த அமைதிப்பேரணி

நேற்று இனஒழிப்புக்கு எதிரான இந்தியர்கள் என்ற அமைப்பு (இலங்கை அரசின் இன ஒழிப்பை எதிர்த்து)ஏற்பாடு செய்திருந்த அமைதிப் பேரணியில் கலந்து கொண்டேன். பெரிய அளவில் கூட்டம் இல்லை என்றாலும், மக்களின் உணர்வை புரிந்து கொள்ள முடிந்தது. சில புகைப்படங்கள் எடுத்தேன். 2 சிறு ஓட்டப் படங்களும் (வீடியோ) எடுத்தேன்.



ஃபாதர் ஜெகத் காஸ்பர் முன்னின்று நடத்திய பேரணி இது. War Memorial இல் தொடங்கிய நடைப்பேரணி ஓமந்தூரார் அரசினர் மாளிகையில் நிறைவடைந்தது. ஜெகத் காஸ்பர் சிறு உரை நிகழ்த்தினார். 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கீழே உள்ள படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி வாசிக்கலாம்.



முல்லைத்தீவு பகுதியில் 220000 தமிழர்கள் அவல நிலையில் தவிக்கையில், இலங்கை அரசு அங்கு 70000 பேர் இருப்பதாக பொய்ச் செய்தியை பரப்பி வருகிறது. வரும் வாரங்களில், போர் என்ற பெயரில், தமிழர்களை அழிப்பதற்கான சதியோ என்று அஞ்சுவதற்கு முகாந்திரம் இருக்கிறது. எப்படியாயினும், போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். புலிகளும், இலங்கை அரசும் பேச்சு வார்த்தை நடத்தியே ஆக வேண்டும், அப்பாவி தமிழர்களின் நல வாழ்வுக்காக. புலிகள், தாங்கள் தயார் என்று கூறியதாக ஒரு செய்தி இன்று பார்த்தேன்.




எந்த சாதி/மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், விடுதலைப்புலி ஆதரவு/எதிர்ப்பு நிலை எடுத்தவராக இருப்பினும், தனி ஈழத்தில் நம்பிக்கை வைத்திருந்தாலும் / இல்லாவிட்டாலும், இந்த சமயத்தில் பேராபத்தில் சிக்கியிருக்கும் , மிக்க அவல நிலையில் உழன்று கொண்டிருக்கும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக, கொடுங்கோல் சிங்கள அரசுக்கு எதிராக, மனிதாபிமான அடிப்படையில் குரல் கொடுக்க வேண்டும்!

..பாலா

3 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

டெஸ்ட்!

Jay said...

பார்த்தா சின்ன கூட்டம் மாதிரித் தெரியவில்லையே?

தாராளமா சனம் வந்திருக்கினம்

M Arunachalam said...

Waste Of Time

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails